நீட் தேர்வு வினாத்தாள் கசிவு : ஒத்துக்கொண்ட மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒத்துக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் மே 5ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 1563 மாணவர்களுக்கான கருணை மதிப்பெண் வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த […]

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒத்துக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் மே 5ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 1563 மாணவர்களுக்கான கருணை மதிப்பெண் வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலரும் மனு தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமையும் நீட் தேர்வு ரத்து செய்யக்கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்து வருகின்றது. இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்து, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே நான்காம் தேதி டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகளுக்கான வீடியோக்கள் வெளியிடப்பட்டதாக விவாதிக்கப்பட்டது. இதனை மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. மேலும் ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu