நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7 ம் தேதி வெளியாக உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - ஆயுஷ் படிப்புகள் போன்ற படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நாடு முழுவதும் 3,500 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் நீட் தேர்வு 18 நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. இந்நிலையில், நீட் இளநிலை நுழைவு மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7 ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஆக ஸ்ட் 30க்குள் நுழைவுத்தேர்வுக்கான விடை குறிப்புகளும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.