ஜமைக்காவில் பிராவிடன்ஸ் தீவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்ததில் தமிழகத்தை சேர்ந்தவர் பலியானார்.
ஜமைக்காவின் பிராவிடன்ஸ் தீவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது மூன்று நண்பர்கள், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகியோர். இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடித்து, துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது கொள்ளையர்களின் தாக்குதலை இவர்கள் எதிர்கொண்டனர். இதில் விக்னேஷ் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்னேஷின் பெற்றோர்கள், அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டுவர கோரிக்கை எழுப்பியுள்ளனர்.