அண்மையில், நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா பதவியேற்றுக் கொண்டார். தற்போது, அவர் 3 கம்யூனிச கட்சிகளை ஒன்றிணைத்து, புதிய கூட்டணி கட்சியை உருவாக்கி உள்ளார்.
தற்போதைய நிலையில், ஆளும் கட்சியாக உள்ள மாவோயிஸ்ட் சென்டர் (சி பி என்) கட்சி தலைவர் பிரசண்டா, ஜே எஸ் பி கட்சியின் தலைவர் யுபேந்திர யாதவ், ஒருங்கிணைந்த சோசியலிஸ்ட் கட்சி தலைவர் மாதவ் நேபால், சிபிஎன் பொதுச் செயலர் நேத்ரா விக்ரம் சந்த் ஆகியோர் இணைந்து கூட்டணியாக ஒற்றைக் கட்சியை உருவாக்கியுள்ளனர். இதற்கு 'நேபாள சோசியலிச முன்னணி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் கீழ், தற்போதைய நேபால் நாடாளுமன்றத்தில் 54 எம்பிக்கள் உள்ளனர். எனவே, இது அறுதி பெரும்பான்மை கொண்ட கட்சியாக உள்ளது. அதே வேளையில், முன்னாள் பிரதமர் கே பி ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிச கட்சி இந்த கூட்டணியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.