நேபாளத்தில் பிரசண்டா தலைமையிலான ஆட்சி மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சி வெற்றியை தக்க வைத்துள்ளது.
நேபாள பிரதமராக கடந்த 18 மாதங்களுக்கு முன்பு பிரசண்டா பதவியேற்றார். அதன் பிறகு, 4வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த முறையும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளார். நேபாளத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டு, அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 275 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், 158 உறுப்பினர்கள் மட்டுமே இன்று வாக்கெடுப்பில் பங்கேற்றனர். முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தது. இறுதியில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரசண்டா ஆட்சியை தக்க வைத்துள்ளார்.