நெஸ்லே நிறுவனம், இந்தியாவில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது

September 25, 2022

பிரபல உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவில், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 5000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஷ்னீடர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கடந்த 60 ஆண்டுகளாக நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. அதற்காக, இதுவரை, சுமார் 8000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தற்போது, அடுத்த 3 ஆண்டுகளுக்குள், 5000 கோடி ரூபாயை முதலீடு செய்ய […]

பிரபல உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவில், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 5000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஷ்னீடர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கடந்த 60 ஆண்டுகளாக நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. அதற்காக, இதுவரை, சுமார் 8000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தற்போது, அடுத்த 3 ஆண்டுகளுக்குள், 5000 கோடி ரூபாயை முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் நெஸ்லே நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவு படுத்த இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த முதலீட்டின் மூலமாக தொடர்ந்து முன்னேற்ற பாதையில் உள்ள நெஸ்லே நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேலாக உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நெஸ்லே நிறுவனம், இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமாகவும் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் வருவாய் 14709 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக, இந்தியாவில் 9 உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் 6000 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது, உற்பத்தி துறையில் இந்த நிறுவனம் மேலும் முதலீடு செய்ய உள்ளதால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, குஜராத் மாவட்டத்தில், இந்த நிறுவனத்தின் பிரபல நூடுல்ஸ் வகையான மேகி தயாரிப்புக்கான உற்பத்தி ஆலை, சுமார் 700 கோடி அமைக்கப்பட்டது. இதனுடன் ஒப்படைக்கையில் தற்போதைய முதலீடு பன்மடங்கு உயர்வு என்பதால், நிறுவனத்தின் வளர்ச்சியும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாராயணன், "நிறுவனத்தின் இந்த பெரிய அளவிலான முதலீடு, மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டதாக உள்ளது. முதலாவது, நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தை தொடரச் செய்வது. இரண்டாவது, நிறுவனத்தின் வளர்ச்சியை நீட்டிப்பதற்கான செயல்களில் ஈடுபடுவது. மூன்றாவது, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக புதிய வாய்ப்புகளை உருவாக்குவது" என்று கூறினார். மேலும், இந்த முறை செய்யப்படும் முதலீடு, தாவர அடிப்படையிலான புரதங்கள், ஆரோக்கியமான தின்பண்டங்கள், முதியோர் ஆரோக்கியத்துக்கான உணவுகள் மற்றும் இந்திய தானியங்களை நிறுவனத்திற்கான தயாரிப்புகளாக மாற்றுவது போன்றவற்றுக்கானதாக இருக்கும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu