நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 23% உயர்ந்துள்ளது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

September 19, 2022

நடப்பு நிதி ஆண்டில், நேரடி வரி வசூல் 7,00,669 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டில், 568147 கோடி ரூபாய் நேரடி வரி வசூல் ஆகி இருந்தது. எனவே, கடந்த 2021-22ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 நிதி ஆண்டில் 23% கூடுதல் வரி வசூல் காணப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில், கார்ப்பரேட் வரி வசூல் மதிப்பு, 368484 கோடி ரூபாயாகவும், தனிநபர் வருமான வரி வசூல் மற்றும் பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 330490 கோடி […]

நடப்பு நிதி ஆண்டில், நேரடி வரி வசூல் 7,00,669 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டில், 568147 கோடி ரூபாய் நேரடி வரி வசூல் ஆகி இருந்தது. எனவே, கடந்த 2021-22ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 நிதி ஆண்டில் 23% கூடுதல் வரி வசூல் காணப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில், கார்ப்பரேட் வரி வசூல் மதிப்பு, 368484 கோடி ரூபாயாகவும், தனிநபர் வருமான வரி வசூல் மற்றும் பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 330490 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்தத் தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், மொத்த நேரடி வரி வருவாய் 30 சதவீதம் உயர்ந்து, 8,36,225 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது என்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், “முந்தைய நிதி ஆண்டில், மொத்த நேரடி வரி வருவாய் 642,287 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், நிறுவன வருமான நேரடி வரி வசூல் 436020 கோடியாகவும், தனிநபர் வருமான நேரடி வரி வசூல் (பங்கு பரிவர்த்தனை வரி உள்பட) 3,98,440 கோடியாகவும் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், “முன்கூட்டி செலுத்தப்படும் வரி வசூலில் 17% வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த நிதியாண்டில், 252077 கோடி ருபாய் வசூலான  நிலையில், நடப்பு நிதி ஆண்டில் 2,95,308 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இதில், பெரு நிறுவனங்கள் சார்பில், 229132 கோடி ரூபாயும், தனிநபர் சார்பில் 66,176 கோடி ரூபாயும் வசூல் ஆகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இதுவரையில், 93% ஐடிஆர் படிவங்கள் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், திருப்பி செலுத்தப்பட்ட வரிகளின் எண்ணிக்கை 468 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 74,140 கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டது. தற்போது, 1,35,556 கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது 83 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு (ஐடிஆர்) படிவங்களைப் பரிசீலிப்பதில் வேகமான நடை முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது தெரிய வருகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu