சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ, ஹமா மற்றும் ஹோம்ஸ் பகுதிகளை கைப்பற்றிய பிறகு, டமாஸ்கஸ் நோக்கி முன்னேறினர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதிகளில் இருந்து தப்பி ஓடினர். டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம், தரயா உள்ளிட்ட புறநகரிலும், மிஜ்ஜே ராணுவ விமான நிலையத்திலும் அரசு படைகள் ஓடிச் சென்றன. இதனால், டமாஸ்கஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதிபர் பஷார் அல்-ஆசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் எங்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. இதன் பின்னர், ஆசாதின் ஆட்சி முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோவில், "இது வரலாற்று நாள்" என குறிப்பிட்டார்.