செய்யறிவு தொழில்நுட்பத்தால் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும் - ஆய்வுத் தகவல்

December 21, 2023

செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இந்த தொழில்நுட்பங்கள் மூலம் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியுமா என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சாட் ஜிபிடி போன்ற திறனுடைய செய்யறிவு தொழில்நுட்பக் கருவி மூலம், ஒருவரின் மரண நேரத்தை துல்லியமாக கணக்கிட முடியும் என தெரியவந்துள்ளது. டென்மார்க் நாட்டு மக்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு life2vec என்ற செய்யறிவு தொழில்நுட்பக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. டென்மார்க் விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கருவி, ஒருவரின் மரண நேரத்தை மற்ற […]

செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இந்த தொழில்நுட்பங்கள் மூலம் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியுமா என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சாட் ஜிபிடி போன்ற திறனுடைய செய்யறிவு தொழில்நுட்பக் கருவி மூலம், ஒருவரின் மரண நேரத்தை துல்லியமாக கணக்கிட முடியும் என தெரியவந்துள்ளது.

டென்மார்க் நாட்டு மக்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு life2vec என்ற செய்யறிவு தொழில்நுட்பக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. டென்மார்க் விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கருவி, ஒருவரின் மரண நேரத்தை மற்ற கருவிகளை விட துல்லியமாக கணக்கிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் நேச்சர் கம்ப்யூடேஷனல் சயின்ஸ் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2008 முதல் 2020 வரை, 6 மில்லியன் மக்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல் நலன் சார்ந்த விவரங்கள், கல்வி தகுதி, மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகிய தகவல்கள், வருவாய், வேலை போன்ற பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கருவி மரண நேரத்தை கணிக்கிறது. பொதுவாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஒருவரின் ஆயுளை கணக்கிடும் துல்லியத்தை விட 11% துல்லியமாக இந்த கருவியின் முடிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu