காவல், தீயணைப்பு துறைகள் சார்பில் ரூ.23.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மாநிலத்தின் அமைதியை பேணிக் காத்து சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
சென்னை முத்தாபுதுப்பேட்டை, திருநெல்வேலி மானூர், திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ரூ.3.47 கோடியில், 3 காவல் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, சென்னை ஆவடியில் ரூ.10 கோடியில் காவலர் சமுதாயக் கூடம், தருமபுரியில் ரூ.5.40 கோடியில் மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் ரூ.23.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.