தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே போதக்காடு,மாரியம்மன் கோவில், கரியதாதனூர் முல்லை நகர் என பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களையும், மருத்துவமனை, பள்ளிகள் என சென்று வருவதற்கு 75 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக மக்கள் அரசிடம் நீண்ட நாட்களாக தார்சாலை அமைக்க வேண்டும், பஸ் வசதி என்ற கோரிக்கையை வைத்து வந்தனர். இந்நிலையில் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்ற மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனை அடுத்து முதல் கட்டமாக குறிப்பிட்ட மலை கிராமங்களை இணைக்கும் புதிய தார்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை கிராமங்களுக்கு பஸ்கள் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பஸ்ஸில் முதல் ஓட்டம் இன்று தொடங்கப்பட்டது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலன் கிடைத்திருப்பதாகவும் குழந்தைகள் பாதுகாப்புடன் இனி பள்ளி சென்று வருவார்கள் என்றும் குறைந்த கட்டணத்தில் நகர பகுதிகளுக்கு சென்று வருவோம் எனவும் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.