தெலுங்கானாவில் நடிகர்களுக்கு புதிய நிபந்தனை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் போதைப்பொருள் தடிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சினிமாத்துறை அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள ஆலோசிக்கப்பட்டது. அதில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் பட குழுவினர் சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வகையில் முன்னணி நடிகர்கள் இரண்டு குறும்படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதை பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும். இவை படம் திரையிடப்படுவதற்கு முன்பு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இத்தகைய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்த்தப்படும் என்று அரசு புதிய நிபந்தனை விடுத்துள்ளது