சென்னையில் புதிய கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம், 10 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான மொத்த செலவு ரூபாய் 487 கொடி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு 2025 அல்லது 2026 இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு இந்த அரங்கத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது.