'புதிய ஏற்றுமதி கொள்கை விரைவில் வெளியிடப்படும்,'' என, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் மண்டல கூடுதல் இயக்குனர், ராஜலட்சுமி தேவராஜ் தெரிவித்தார்.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் மண்டல கூடுதல் இயக்குனர், ராஜலட்சுமி தேவராஜ் கூறுகையில், பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான கொள்கைகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வருகின்றன. 2015ல் வெளியிடப்பட்ட ஏற்றுமதி கொள்கை, 2022 வரை நீட்டிக்கப்பட்டது. அதனால், புதிய ஏற்றுமதி கொள்கை விரைவில் வெளியிடப்படும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபடுவோருக்கு, அதற்கான குறியீடு கட்டாயம். இந்த குறியீடு வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தக இயக்குனரகத்தால் வழங்கப்படுகிறது. இந்தியாவின் ஏற்றுமதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, 45 சதவீதமாக உள்ளது. இவற்றை அதிகரிக்க சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.