பயணிகளுக்கு யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி: இந்திய ரயில்வே நிர்வாகம்

November 12, 2022

இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய யுடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய யுடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 5 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் இருக்கும் பகுதிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் பெற முடியும். இது தற்போது 20 […]

இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய யுடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய யுடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 5 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் இருக்கும் பகுதிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் பெற முடியும். இது தற்போது 20 கி.மீ. தொலைவு என்று தளர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 டிக்கெட்டுகளை வாங்கலாம்.

நடைமேடைக்கு மட்டும் செல்வதற்கான டிக்கெட், மாதந்திர சலுகை பாஸ் ஆகியவையும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வாங்கலாம். அனைத்து மண்டலங்களுக்கும் இந்த வசதி நவம்பர் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும், தொடர்ந்து பயணிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu