கொளத்தூர் ராஜா தோட்டத்தில் ரூபாய் 27.03 கோடி மதிப்பில் 162 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் ராஜா தோட்டம் பகுதியில் 1975 ஆம் ஆண்டு 326 சதுர அடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்து வாழ தகுதியற்ற நிலையில் இருந்தது. அவற்றை அகற்றி தூண் மற்றும் ஒன்பது தளங்களுடன் 162 புதிய குடியிருப்புகள் கட்ட திட்டம் தீட்பபட்டுள்ளது. இதற்கு ரூபாய் 27.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது. இந்த குடியிருப்புகளில் ஒவ்வொரு குடியிருப்பும் 410 சதுர அடி பரப்பளவில் அமையுள்ளது. இது ஒவ்வொரு வீட்டிற்கும் தனி தனியாக மின்சாரம் குடிநீர் வசதிகள் உள்ளன.இதில் முன்னதாக இருந்த குடியிருப்பு தாரர்க்கு செய்யப்பட்டு மீதம் உள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.