ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து பெங்களூருக்கான புதிய விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.
திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் இண்டிகோ அதிக கட்டணத்தில் சேவைகள் வழங்கி வந்தது. இதனை மாற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து சென்னைக்கு தினசரி சேவையை கடந்த வாரம் தொடங்கியது, மேலும் இது பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல், திருச்சியில் இருந்து பெங்களூருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானம், 7.10 மணிக்கு முன்பே சென்றது. அதன்பின், பெங்களூருவிலிருந்து மாலை 6.30 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு திருச்சி வந்தது. இந்த புதிய சேவை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.