பாலியல் குற்றங்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை ஜப்பான் அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.
பாலியல் வன்முறை, பாலியல் வல்லுறவுக்கு எதிரான நடவடிக்கையை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி திருமணத்துக்கான வயதை அதிகரிப்பது, பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது, தண்டனையை கடுமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மற்றவர்களின் முறையான ஒப்புதலின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர ஜப்பான் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபசமாக மாற்றுவதும் குற்றமாக்க பரிந்துரைக்கிறது. குறிப்பாக, எந்தவித நியாய காரணமின்றி, குழந்தைகளை பாலியல் காரணங்களுக்காக படம் பிடிப்பதை இச்சட்டம் முற்றிலும் தடை செய்கிறது. அத்துடன் பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இச்சட்டம் தடை செய்கிறது.