மாலத்தீவின் அதிபராக முகமது மூயிஸ் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
நேற்று மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டின் தலைமை நீதிபதி முடாஸிம் அதனான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜு, வங்கதேச செய்தி துறை அமைச்சர் ஹசன் மாமுத், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, பாகிஸ்தான் ஒளிபரப்பு துறை அமைச்சர் முர்தாஜ் சோலங்கி போன்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர் முன்னாள் அதிபர் அப்துல்லா ஆதரவாளர். முந்தைய அதிபர் இப்ராஹிம் முகமது இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருந்தார். அவரை கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோற்கடித்தார். இதனால் இவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் புதிய அதிபருடன் நட்புறவை வலுப்படுத்த தயாராக உள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவில் இந்திய ராணுவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.