காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணியாக புவி வெப்பமயமாதல் உள்ளது. புவி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணம் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பதே ஆகும். அந்த வகையில், பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சும் பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மாசடைந்த உலகத்தை தூய்மைப்படுத்துவதற்கான முயற்சியில் இது மிகவும் துணை புரியும் என கருதப்படுகிறது.
கேஜ் ஆப் கேஜஸ் என்று ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் ஒரு பொருள், கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை உள்ள வாயுக்களை உறிஞ்சும் திறன் கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சுவது மட்டுமின்றி, அதனை தன்னகத்தை அடக்கி வைத்துக் கொள்வதே இதன் சிறப்பாகும். மேலும், காற்றில் காணப்படும் இதர விஷ வாயுக்களையும் இந்த புதிய பொருள் உறிஞ்சிக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொழிலக கட்டமைப்புகளில் இந்த பொருளை பயன்படுத்துவதால், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என கருதப்படுகிறது.