முன்பதிவில் 2.5 கோடி போலி கணக்குகளை நீக்கிய IRCTC – விரைவில் இ-ஆதார் பதிவு கட்டாயம்!
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரெயில் பயணம் பெரும் சவாலாகிவிட்டது. தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை உருவாக, மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த IRCTC, 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கியது. இதனையடுத்து, தட்கல் டிக்கெட் முறையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வர, விரைவில் இ-ஆதார் அடிப்படையில் பயணிகள் பதிவு செய்யும் புதிய முறை அறிமுகமாகவுள்ளது என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது மூலம் பயணத்தில் நம்பகத்தன்மையும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.