ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுக் கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ல் தொடங்கிய பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டத்தின் புதிய பதிப்பில், ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுக் கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 120 சதுர மீட்டர் அளவுக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு பொருந்தும். மத்திய அரசு இதற்கான ஒப்புதலையும், நிதி உதவியையும் வழங்கி உள்ளது. மேலும், குறைந்த வருமானப் பிரிவினர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்ட உதவும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.