சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதத் தொகைகள் டிஜிட்டல் முறையில் விதிக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பகுதியில், தினசரி 7 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இந்நிலையில் பொது நகரங்களில் குப்பை கொட்டுவதைக் கட்டுப்படுத்த, அபராதத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில், குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.2½ லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி, அபராதங்களை டிஜிட்டல் முறையில் விதிக்க திட்டமிடுகிறது. இதற்காக 500 புதிய கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, 15 மண்டலங்களில் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.