பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய நடைமுறை

August 11, 2023

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலி மனை இடம் விற்க புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் காலி மனை இடம் குறித்த பத்திரப்பதிவு நடைபெறும் பொழுது அங்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அவை காலி மனையிடங்களாக பதியப்படுகிறது. இது குறித்து அரசுக்கு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அரசு வருவாய் பாதிப்படைகிறது. இதனை தவிர்க்க இனி பொதுமக்கள் காலிமனை குறித்து ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஆவணங்களுடன் பிரஸ் தாப இடத்திற்கு முன்பாக […]

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலி மனை இடம் விற்க புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் காலி மனை இடம் குறித்த பத்திரப்பதிவு நடைபெறும் பொழுது அங்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அவை காலி மனையிடங்களாக பதியப்படுகிறது. இது குறித்து அரசுக்கு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அரசு வருவாய் பாதிப்படைகிறது.

இதனை தவிர்க்க இனி பொதுமக்கள் காலிமனை குறித்து ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஆவணங்களுடன் பிரஸ் தாப இடத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட வேண்டும். மேலும் இது ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த நடைமுறை வருகின்ற 16-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றது. இதை பின்பற்றாத சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பத்திர பதிவு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu