வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பாளையங்கோட்டை, சேரன்மாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ஐந்து கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும், இதற்கான தகவல்களை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அனைத்து வட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.