டாஸ்மாக் கடைகள் குறித்து புதிய கட்டுப்பாடு – புகாரில் 30 நாட்களில் தீர்வு!

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு தமிழகத்தில் உள்ள 4,777 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் சில தூர அளவுகளை பின்பற்றி அமைக்கப்பட வேண்டும். நகர் பகுதிகளில் 50 மீட்டர் மற்றும் கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரம் கல்வி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், வழிபாட்டு தலங்கள் இருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சில கடைகள் இந்த நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. மேலும் […]

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழகத்தில் உள்ள 4,777 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் சில தூர அளவுகளை பின்பற்றி அமைக்கப்பட வேண்டும். நகர் பகுதிகளில் 50 மீட்டர் மற்றும் கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரம் கல்வி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், வழிபாட்டு தலங்கள் இருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சில கடைகள் இந்த நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. மேலும் சில இடங்களில் கடை வந்த பின்புதான் அருகில் பள்ளி, கோவில் போன்றவை உருவாகின்றன. இதுவரை அந்த கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. கடையின் பின்னர் அமைக்கப்பட்ட இடங்களுக்கும் புகார் வந்தால், கலெக்டர் அவற்றை 30 நாட்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu