மத்திய அரசு வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கிறது. 15 சிலிண்டர் வரை பயன்படுத்தியவர்கள் கூடுதல் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயன்றால், "213 கிலோ எரிவாயு பயன்படுத்தியுள்ளீர்கள்" என எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இதனால், கூடுதல் சிலிண்டர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுவதாவது, “முடிந்த அளவு சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிலிண்டர் தேவைப்பட்டால், காரணம் விளக்கி கடிதம் கொடுத்தால் வழங்கப்படும்.”பொதுமக்கள், "12 சிலிண்டர்களுக்கு மேலே மானியம் தேவையில்லை, ஆனால் சிலிண்டர் விநியோக விவரம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்," எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.