டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்

January 2, 2024

ரிசர்வ் வங்கி யு.பி.ஐ பண பரிவர்த்தனை செயலி பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்டிக்கடை முதல் நகை கடைகள் வரை கூகுள்பே, பேடிஎம் என்று பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் யுபிஐ செயலிகள் மூலம் அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஐ செயலி மூலம் 8300 கோடி முறை ரூபாய். 1.39 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரிசர்வ் […]

ரிசர்வ் வங்கி யு.பி.ஐ பண பரிவர்த்தனை செயலி பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்டிக்கடை முதல் நகை கடைகள் வரை கூகுள்பே, பேடிஎம் என்று பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் யுபிஐ செயலிகள் மூலம் அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஐ செயலி மூலம் 8300 கோடி முறை ரூபாய். 1.39 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதில் ஒரு வருடத்திற்கும் மேல் பயன்படுத்தாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயல் இழக்க செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பண மோசடிகளை தவிர்க்க 2000 க்கு மேல் செய்யப்படும் முதல் பண பரிவர்த்தனைக்கு நான்கு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் பண பரிவர்த்தனை உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. யுபிஐ வாலட் அல்லது ப்ரீபெய்டு பேமெண்ட் கருவி மூலம் ரூபாய் 2000 க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. யுபிஐ மூலம் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஹிட்டாச்சி எனும் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து யுபிஐ ஏடிஎம்களை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu