அமெரிக்கா, விண்வெளி குப்பைகள் குறித்து புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது

பூமியிலிருந்து விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள், விண்கலங்கள் போன்றவற்றின் மூலம், ஏராளமான விண்வெளி குப்பைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, செயலிழந்த செயற்கைக்கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய உதிரி பாகங்கள், நிராகரிக்கப்பட்ட ராக்கெட் கோர் பாகங்கள் போன்றவற்றின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றால், எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு ஆபத்துகள் நேரலாம் என்பதால், இவை குறித்த புதிய சட்ட திருத்தத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதற்காக, நடைபெற்ற எம் பி க்களின் வாக்கெடுப்பில், 4 - 0 என்ற விகிதத்தில் இந்த […]

பூமியிலிருந்து விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள், விண்கலங்கள் போன்றவற்றின் மூலம், ஏராளமான விண்வெளி குப்பைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, செயலிழந்த செயற்கைக்கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய உதிரி பாகங்கள், நிராகரிக்கப்பட்ட ராக்கெட் கோர் பாகங்கள் போன்றவற்றின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றால், எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு ஆபத்துகள் நேரலாம் என்பதால், இவை குறித்த புதிய சட்ட திருத்தத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதற்காக, நடைபெற்ற எம் பி க்களின் வாக்கெடுப்பில், 4 - 0 என்ற விகிதத்தில் இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1957ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 10,000 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, சுமார் 4800 செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுவட்ட பாதையில் உள்ளன. இந்த எண்ணிக்கை தரவுகள் விண்வெளி குப்பைகள் குறித்த அவசியத்தை உணர்த்துகின்றன. இதன் காரணமாகவே, இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து FCC யின் தலைவர் ஜெசிக்கா ரோசன்வோர்செல் கூறியதாவது: "விண்வெளி குப்பைகள் மீதான புதிய சட்டம், அதிக பொறுப்புணர்வை குறிப்பதாக உள்ளது. மேலும், பூமியின் சுற்றுவட்ட பாதையில் உள்ள குப்பைகளினால் எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கு ஏற்படும் தடைகள் குறைக்கப்படுகிறது. எதிர்கால விண்கலத் திட்டங்களுடன் இந்த விண்வெளி குப்பைகள் மோதும் எண்ணிக்கை இதன் மூலம் வெகுவாகக் குறைக்கப்படும்" என்று கூறினார். மேலும், இந்த சட்டத்தின் மூலம், குறைந்த தூர பூமி சுற்றுவட்ட பாதையில் உள்ள வணிகச் செயற்கை கோள்களை அகற்றுவதற்கான காலக்கெடு, 25 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

“விண்வெளி தொடர்பான முதல் அத்தியாயம் முடிந்து விட்டது. தற்போது, இரண்டாம் விண்வெளி யுகத்திற்கான அத்தியாயம் தொடங்கப்படுகிறது. எனவே, நம்மை நாமே சுத்தம் செய்து கொள்ள வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்கான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு நாசா நிதி அளித்து வருகிறது. அதற்கான சட்ட வரைவுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது” என்று FCC யின் தலைவர் ஜெஃப்ரி ஸ்டார்க்ஸ் கூறியுள்ளார். இந்த சட்டத்தினால் களையப்படும் விண்வெளி குப்பைகள் மூலம், விண்வெளி ஆய்வுகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu