மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை சீனா அறிவித்துள்ளது. அண்மையில், ராணுவ தொடர்பில்லாத ஒருவரை தனது சொந்த தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு சீனா வெற்றிகரமாக அனுப்பியது. அதனைத் தொடர்ந்து, இந்த நிலவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய மூன்றாவது நாடாக சீனா உள்ளது. இந்நிலையில், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து சீனா தெரிவித்துள்ளது. நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், சீனாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டம் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் ஆகியவை இணைந்த நிலவு திட்டமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம், நிலவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதில், அமெரிக்கா மற்றும் சீனா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.