தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவின் ஆழ்கடலில் வாழும் கோயிலாகாந்த் மீன்கள் அழிந்துவிட்டதாக கருதப்பட்டன. ஆனால், 1938-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது, வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கோகோ அமைப்பில் இருந்து 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான கோயிலாகாந்த் மீனின் நன்கு பாதுகாக்கப்பட்ட புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Ngamugawi wirngarri என்று பெயரிடப்பட்ட இந்த புதைபடிவம், கோயிலாகாந்த் மீன்களின் உடற்கூறியல் பற்றிய புதிய தகவல்களை வழங்குகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், கோயிலாகாந்த் மீன்கள் கடந்த 410 மில்லியன் ஆண்டுகளில் எவ்வாறு பரிணமித்தன என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள், புதிய உயிரினங்கள் உருவாவதற்கு கடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இருப்பதாக கருதப்பட்ட நிலையை மாற்றியுள்ளது. மாறாக, பூமியின் தகடுகளின் இயக்கமே புதிய உயிரினங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. தற்போது வாழும் கோயிலாகாந்த் மீன்கள் வெளிப்புறமாக பார்க்க பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், அவற்றின் மரபணுக்கள் தொடர்ந்து மாறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.