இலங்கையில் தீர்க்கப்படாத முக்கிய வழக்குகளை மறுபரிசீலனை செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆளும் தேசிய மக்கள் சக்தி, பழைய வழக்குகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டுமென உறுதி அளித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சகம், இந்த வழக்குகளின் விசாரணை முறைகளை சோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிஹல் தல்துவா, 'தீர்க்கப்படாத முக்கிய வழக்குகளை மறுவிசாரணை செய்யவேண்டும்' என தற்காலிக காவல்துறை தலைவரிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகளில், 2019 ஆம் ஆண்டில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட ஈஸ்டர் சண்டே பயங்கரவாத தாக்குதல், 2005 ஆம் ஆண்டு தமிழ் பத்திரிகையாளர் கொலை, 2015 இல் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீது மத்திய வங்கி கடன் பத்திர வெளியீட்டு ஊழல் குற்றச்சாட்டு போன்றவை உள்ளன.