எலான் மஸ்கின் எக்ஸ் சமூக தளத்தில் பதிவுகளை இடுவதற்கு புதிய பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலி கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கு எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மூலம் இயக்கப்படும் கணக்குகளை கேப்சா மூலமாக கூட தவிர்க்க முடியவில்லை. எனவே, புதிதாக தளத்தில் இணையும் பயனர்கள் பதிவுகளை இடுவதற்கு அடிப்படைக் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார். இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், புதிதாக எக்ஸ் தளத்தில் இணையும் பயனர்கள் கட்டணம் செலுத்தாமல் பதிவிட முடியாது. இது உலக அளவில் விமர்சனங்களை பெற்று வருகிறது.