நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்க்ஸ் மவுண்ட் ஈடன் ஏவ் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். மாலை 4:30 மணி அளவில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில், 4 ஆண்களும், 2 பெண்களும் காயமடைந்தனர். அவர்களில் 34 வயதான ஆண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபருக்கும் ரயிலில் இருந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் பயணிகள் தெரிவிக்கிறார்கள். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.