நியூஸிலாந்தில் சிறுவர்கள் மற்றும் மிகவும் பின்தங்கியவருக்கான காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு, அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோஃபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக மன்னிப்பு கேட்டார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்ஸன், 'காப்பகங்கள், சிறுவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தன. ஆனால் அதுவே அவர்களை துன்புறுத்தியதாக வேதனை தெரிவித்தார். 1950 முதல் 2019 வரை, மத அடிப்படையில் செயல்பட்ட காப்பகங்களில் 6.5 லட்சம் சிறுவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் பாலியல் மற்றும் மன ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாகியிருந்ததாக அண்மையில் நடந்த விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. பூர்வ குடியினர் அதிகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.