நியூசிலாந்தில் இன்று காலை 5.6 லிட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் முக்கிய நகரான கிரிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே சுமார் 124 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதுவரை சேதம் குறித்து எந்த தகவல்களும் வரவில்லை. சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என தெரிகிறது.நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பசபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.