உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையே நடைபெற்றது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 41வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 172 ரன்கள் இலக்காக கொண்டிருந்தது. இதில் 23.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து நியூசிலாந்து இலங்கை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.