தமிழகத்தில் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 1.45 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.அவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் ஆயிரத்து 1513 வகையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட எட்டு வகையான உயர் அறுவை சிகிச்சைகளும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டமானது 854 அரசு மருத்துவமனைகள் மற்றும் 975 தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது புதிதாக மேலும் தமிழகத்தில் 84 தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.