இம்ரான்கானின் பேச்சு, பேட்டியை செய்தி நிறுவனங்கள் வெளியிட பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இம்ரான்கானின் பேச்சு, பேட்டி உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு தகவல் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெறுப்பை தூண்டும் வகையில் இம்ரான்கான் பேசி வருவதாகவும் அவரது பேச்சு, பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று பாகிஸ்தான் தகவல் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு அமலான 2 மணி நேரத்தில் பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனமான எஆர்ஒய் செய்தி நிறுவனம் லாகூரில் இம்ரான்கான் பேசியதை ஒளிபரப்பு செய்தது. தடையை மீறி இம்ரான்கான் பேச்சை ஒளிபரப்பு செய்ததால் அந்த செய்தி நிறுவனத்தின் உரிமத்தை பாகிஸ்தான் தகவல் தொலைதொடர்புத்துறை ரத்து செய்தது.