காசாவுக்கு காற்றாலை மின்சாரம் ஏற்படுத்தி தந்த பாலஸ்தீன சிறுவன்

February 7, 2024

காசா பகுதியில் நடந்து வரும் போர் காரணமாக அந்த நகரமே இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு வசிக்கும் 15 வயதான பாலஸ்தீன சிறுவன் ஒருவன், கிடைத்த பொருட்களைக் கொண்டு காற்றாலை மூலம் மின்சாரம் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். உசாம் அல் அத்தார் என்ற பாலஸ்தீன சிறுவன், முகாம்களில் இருளில் தங்கி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் காற்றாலை மின்சாரத்தை ஏற்படுத்தி உள்ளான். அந்த சிறுவனுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காசாவில் உள்ள […]

காசா பகுதியில் நடந்து வரும் போர் காரணமாக அந்த நகரமே இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு வசிக்கும் 15 வயதான பாலஸ்தீன சிறுவன் ஒருவன், கிடைத்த பொருட்களைக் கொண்டு காற்றாலை மூலம் மின்சாரம் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். உசாம் அல் அத்தார் என்ற பாலஸ்தீன சிறுவன், முகாம்களில் இருளில் தங்கி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் காற்றாலை மின்சாரத்தை ஏற்படுத்தி உள்ளான். அந்த சிறுவனுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

காசாவில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்துள்ள நிலையில், சிறுவனின் செயல் புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. அந்நாட்டின் இளம் விஞ்ஞானியாக இந்த சிறுவன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். குறிப்பாக, ‘காசாவின் நியூட்டன்’ என அவனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறுவன் காற்றாலை மூலம் மின்சாரம் ஏற்படுத்தி தந்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu