எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அடுத்த வாரத்தில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொதுவாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கிவிடும். அதேபோன்று இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் […]

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அடுத்த வாரத்தில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொதுவாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கிவிடும். அதேபோன்று இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியானது. ஆனால் நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியும், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. மேலும் நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளதால் அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் மாநில அரசு நடக்கும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu