சென்னையில் பல இடங்களில் e என்.ஐ.சோதனை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 5 இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், மற்றும் புறநகர் பகுதிகளில், மேலும் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் சோதனை நடக்கின்றது.