ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு பயங்கரவாத அமைப்புகளில் வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஸ்ரீ நகரில் உள்ள கலம்தான் போராவை சேர்ந்த முசாமில் ஷபிகான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஊழியரான முஸ்டாக் அகமதுதார் என்பவர் வீட்டிலும், இவை தவிர மேலும் பல இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய படை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் துணை ராணுவத்தினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.