ஆட்கடத்தல் வழக்கில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தின. 6 மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகள், குறிப்பாக பிஹார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில், மத்திய அரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்களுக்காக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சில நாடுகளில், இளைஞர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக கையாளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இந்த மோசடி வழக்கில், கடந்த சில மாதங்களில் பல இந்தியர்களை மீட்டுள்ளனர்.