பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக 23,000 புள்ளிகளை இன்று நிஃப்டி தொட்டுள்ளது. ஆனால், இறுதியில் 22957.1 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 75410.39 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இன்றி பங்குச்சந்தை நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், எச்டிஎப்சி வங்கி, எல் அண்ட் டி, ஏர்டெல், பிபிசிஎல், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி போர்ட்ஸ், டாடா கன்சியூமர், டெக் மஹிந்திரா, ஐடிசி, டைட்டன், மஹிந்திரா, டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, பவர் கிரிட், ஐடிசி, அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.