இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆரம்பத்தில் உயர்ந்து வந்த வர்த்தகம் இறுதியில் சரிவடைந்து, 0.2% ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை 76606.57 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 23322.95 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக சரிவடைந்து வந்த சென்செக்ஸ் இன்று ஏற்றம் பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், கோல் இந்தியா, பவர் கிரிட், ஈச்சர் மோட்டார்ஸ், எஸ் பி ஐ லைப், டெக் மஹிந்திரா, ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், மஹிந்திரா, பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்ஸ்யூமர், டைட்டன், இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், கோட்டக் வங்கி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.