உச்சத்தில் பங்குச்சந்தை - முதல் முறையாக 19000 புள்ளிகளை தொட்ட நிஃப்டி - 64000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

June 28, 2023

நேற்று முதல் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வரும் நிலையில், இன்று வரலாற்று உச்ச உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்றைய வர்த்தக நேரத்தில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் தன் வரலாற்றில் முதல் முறையாக 19000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அதே வேளையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 64000 புள்ளிகளைக் கடந்துள்ளது. பருவமழையின் தொடக்கம், எச்டிஎப்சி வங்கி ஒருங்கிணைப்பு, அதானி குழுமத்தில் ஜி க்யு ஜி பார்ட்னர்ஸ் […]

நேற்று முதல் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வரும் நிலையில், இன்று வரலாற்று உச்ச உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்றைய வர்த்தக நேரத்தில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் தன் வரலாற்றில் முதல் முறையாக 19000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அதே வேளையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 64000 புள்ளிகளைக் கடந்துள்ளது. பருவமழையின் தொடக்கம், எச்டிஎப்சி வங்கி ஒருங்கிணைப்பு, அதானி குழுமத்தில் ஜி க்யு ஜி பார்ட்னர்ஸ் முதலீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் பங்குச்சந்தையின் ஏற்றத்திற்கான காரணமாக கூறப்படுகின்றன.

இன்றைய வர்த்தக நேர நிறைவில், நிஃப்டி 154.7 புள்ளிகள் உயர்ந்து, 18972.1 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 499.39 புள்ளிகள் உயர்ந்து, 63915.42 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்றம் அடைந்துள்ளன. அதே வேளையில், கோட்டக் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி லைஃப், விப்ரோ போன்ற சில நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu