நைஜீரியா - ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 113 பேர் பலி

December 26, 2023

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நைஜீரியாவின் பிளேட்டு மாகாணத்தில் வன்முறை சம்பவம் நடைபெற்று உள்ளது. முதற்கட்டமாக, 16 பேர் பலியானதாக நைஜீரியா அரசு தெரிவித்தது. இந்த நிலையில், இன்று, மொத்தம் 113 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் […]

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நைஜீரியாவின் பிளேட்டு மாகாணத்தில் வன்முறை சம்பவம் நடைபெற்று உள்ளது. முதற்கட்டமாக, 16 பேர் பலியானதாக நைஜீரியா அரசு தெரிவித்தது. இந்த நிலையில், இன்று, மொத்தம் 113 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்துக்கு பிறகு, நைஜீரியாவில் நடைபெறும் மிகப்பெரிய வன்முறை சம்பவம் இதுவாகும். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu