நைஜீரியாவில் பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில், ஐ.எஸ்., அல்கொய்தா மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்புகள் பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் அடிக்கடி குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. நேற்று, நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில், பாதுகாப்பு படையினர் ரோந்து பணிக்குச் சென்ற வாகனங்களை போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். அப்போது 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மோதலின் போது, 7 பாதுகாப்பு வீரர்கள் கடத்தப்பட்டனர்.