நைஜீரிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. தற்போது, இந்த தேர்தலில், லாக்கோஸ் மாகாண முன்னாள் ஆளுநர் போலா அஹமத் டினுபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த இவர் வெற்றி பெற்றதில், முறைகேடுகள் உள்ளதாக கூறும் எதிர்க்கட்சியினர், சட்டரீதியாக இதனை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் மகிழ்ச்சி தெரிவித்த டினுபு, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 70 வயதாகும் டினபுவுக்கு, இந்த தேர்தலில் 8.8 மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளன. இது கிட்டத்தட்ட 36.6% வாக்குகளுக்கு சமமாகும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியை சேர்ந்த அட்டிகு அபூபக்கர், இவருக்கு மிகவும் சவாலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பீட்டர் ஓபி உள்ளார். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.